புதினங்களின் சங்கமம்

யாழில் யுவதிக்கு அலங்கோலம் செய்து களவெடுத்த கொள்ளையன் மடக்கிப் பிடிப்பு! (Photo)

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கைப்பையை அபகரித்துக் கொண்டு மோட்டார்ச் சைக்கிளில் தப்பிச் செல்ல முயற்சித்த திருடன் அப்பகுதி இளைஞன் ஒருவனால் பிடிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டுச் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(25) காலை-09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இளைஞன் யாழ். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் எனவும், இவர் சுன்னாகம், மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வழிப்பறித் திருட்டுக்களுடன் தொடர்புடையவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து விழிப்பாக இருக்க வேண்டுமென சுன்னாகம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}