இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா!!
இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குவைட்டில் இருந்து வருகை தந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், இந்தியாவில் இருந்து வந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கும் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கைதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,312 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 191 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

