வளைந்து நெளிந்து பாம்போட்டம் ஓடிய கஞ்சா காவாலி!! உடுவிலில் பரபரப்பு!(Photos)
இன்று காலை(17) 7.15 மணியளவில் உடுவில் ,மருதனார் மடம் ,உடுவில் பகுதியில் இந்த இலக்கத்தையுடைய (BHZ 3059) மோட்டார்சைக்கிளில் கஞ்சா வெறியில் காவாலியொருவன் வேகமாக வெட்டி வெட்டி வேகமாக ஓடியதால் மாணவர்களும் மக்களும் பீதியடைந்தனர். பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் ,சந்தைக்கு அதிக மக்கள் செல்லும் சன நெருக்கடியுள்ள நேரமான காலையில் இச்சம்பவம் நடந்ததால் பரபரப்பு நிலவியது. உடுவில் மகளிர் கல்லூரி முன்பும் மருதனார்மடம் சந்தியிலும் கடமையிலீடுபட்ட பொலிசாரைக்கண்டதும் ‘பம்மிய’ காவாலி அதன் பின்னரும் தனது குரங்கு வேலையை காட்டித்திரிந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.



