மட்டக்களப்பை அச்சுறுத்தும் வாள் வெட்டுக் காவாலிகளின் புகைப்படங்கள் !!
செங்கலடி பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வாள் வெட்டு குழுவினர் என சந்தேகிக்கப்படும் சிலரது புகைப்படங்களை இலங்கை புலனாய்வு துறையினர் வெளியிட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல், கொள்ளையடித்தல், களவு எடுத்தல் செங்கலடி கொம்மாதுரை ஆண்டார்குளம் பகுதிகளில் கோழி களவு எடுத்தல் , பொதுமக்களை அச்சுறுத்தி வழிப் பரி செய்து வருகின்றனர்.
இதில் கடந்த பல வருடங்களாக சிறிலங்கா பொலீசாருடன் நேரடி தொடர்வுகளை கொண்டிருந்த வாள் வெட்டு குழுவின் தலைவர்களை கொழும்பில் இருந்து வந்த விசேட புலனாய்வு பிரிவினர் தேடிவருகின்றனர்.
இதுவரை ஐந்து வாள் வெட்டு குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள் இன்னும் நூறு பேர் வரை உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.