புதினங்களின் சங்கமம்

யாழில் கடன் வாங்கியவன் ஏமாற்றியதால் 20 வயது சசீதா துாக்கில் தொங்கி தற்கொலை!!

தென்மராட்சி வரணிப் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

தவறான முடிவு எடுத்த யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்

இந்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

நந்தகுமார் சதீசா வயது 20 என்பவரே மரணமடைந்துள்ளார்

தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பெண் யாரோ ஒருவருக்கு காசு கொடுத்துள்ளார்
கொடுத்த காசை திருப்பி கொடுக்கவில்லை அதனால் தற்கொலை செய்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியதாக தெரிய வருகிறது

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.