புதினங்களின் சங்கமம்

திருட்டை காட்டிக் கொடுத்த ஒரு பிள்ளையின் தந்தை கொலை – இலங்கையில் கொடூர சம்பவம்

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் நேற்று முன் தினம் (06) ஒருவரை வாளால் வெட்டி கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூவரசம்பூ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல் மனாப் என்பவர் பாடசாலையொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காட்டிக் கொடுத்துள்ளார்..

இதனால் ஆத்திரம் அடைந்ததவர்கள் இவரை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர்..

இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளான நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

இச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.