கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு அருகில் மற்றுமொரு குண்டு வெடிப்பு!!
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து சமூகவலைத்தளங்களும் இலங்கையில் தடைசெய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.