இலங்கையில் மற்றுமொரு உயிரியின் பரவல்! பிரதேச மக்கள் பெரும் பாதிப்பு!!
கம்பளிப்பூச்சி இனத்தின் பரவல் காரணமாக மெதிரிகிரிய – தம்சோபுர பிரதேச மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வினை பெற்று தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பளிப்பூச்சிகள் வீடுகளுக்கு வருவதினால் பெரும் பிரச்சினையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது விவசாய பயிர் செய்கைகளுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.