புதினங்களின் சங்கமம்

சுவிஸ்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாயார் திடீர் உயிரிழப்பு!!

வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் 23 2020 செவ்வாய்க்கிழமை அன்று மூளை நரம்பு வலிகாரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். சுவிஸ்லாந்து பேர்ன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த குறித்த பெண் நல்ல ஆரோக்கியமாக இருந்துள்ளார். சம்பவத்தில் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த திருமதி சுதா பிறேம்ராஜ்..வயது.39.என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது உறவினர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.