புதினங்களின் சங்கமம்

யாழில் கடந்த மாதம் 337பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்!!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உட்பட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதில், வீதி விபத்திற்கு உள்ளான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மோ மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் 212 பேரும், ஏனை விபத்தில் 118 பேரும், தீவிபத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதிவரையில் வீதி விபத்தில் 43 பேரும், ஏனைய விபத்தில் 68 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் வீதி விபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.