புதினங்களின் சங்கமம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்ந்தேறியது! (video)

இறுதிப்போரில் உயிர்க்கொடை செய்த மக்களை ஒரு சேர வணங்குகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

நிகழ்விற்கான ஏற்பாட்டினை வடக்கு – கிழக்கு முள்ளிவாய்க்காகல் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கான அனுமதி பொலிஸாரால் வழங்கப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வணக்கம் செலுத்தினர்.

போரில் உறவுகளை இழந்த தாயார் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார், தொடர்ந்து அகவணக்கம், கொள்கைப் பிரகடனம் என்பன இடம்பெற்றன.

மேலதிக செய்திகள், காணொளிகளை எதிர்பாருங்கள்.

Image may contain: one or more people, people standing, outdoor and natureImage may contain: one or more people, people walking, people standing, sky and outdoorImage may contain: one or more people, people standing, people walking, outdoor and natureImage may contain: one or more people, people standing and people walking