17 வயது மாணவியைச் சீரழித்த ஐ.பி.சி முதலாளி பாஸ்கரன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!(Photos)
லிபரா என்ற தொலைத்தொடர்பு சேவையை புலம்பெயர் நாடுகளில் நாடத்தி வந்த ஐ.பி.சி முதலாளியான பாஸ்க்கரன் தமிழ்வின் குழுமத்தைச் சேர்ந்த 36 இணையத்தளங்களை விலைக்கு வாங்கி வைத்துள்ளான். குறித்த இணையத்தளங்கள் வன்னி நாட்டாமை சிறிதரனின் சகோதரனான சிறிகுகனுக்கு சொந்தமானதாக இருந்து பின்னர் பாஸ்கரனுக்கு விற்கப்பட்டது. அதுவும் சிறிதரனும் அவரது ஆதரவாளர்களும் அனு்பபும் செய்திகள் எல்லாவற்றையும் பிரசுரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஒப்பந்தம் எழுதி விற்கப்பட்டது. இவ்வாறு விற்கப்பட்ட இணையத்தளங்களை ஐ.பி.சி பாஸகரன் குரங்கின் கையில் பூமாலை போல் பாவித்து வருகின்றான். புலம்பெயர்தமிழர்களால் நடாத்தப்பட்ட ஐ.பி.சி ஊடகத்தையும் இவனே விலை கொடுத்து வாங்கியிருந்தான்.
இவன் தனது இணையத்தளங்களுக்கு ஊடகவியலாளர்களை நியமிக்காது ஏதாவது பேஸ்புக் அல்லது வேறு இணையத்தளங்களில் வரும் செய்திகளை அதே எழுத்துப்பிழைகளுடன் சேர்த்து சுட்டே பிரசுரித்துவிடுவான்…. இவ்வாறான கேவலங்கள் புரிந்து குறித்த இணையத்தளங்களை நடாத்திவரும் பாஸ்கரன் தற்போது இசைப்பிரியாவின் மகள் என்று கூறி ஒரு சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவியை சீரழித்த பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.
#உண்மைக்கு_புறம்பான_செய்தி_தொடர்பில்_பாடசாலைச்சமூகத்தின்_கவலையும்_கண்டனமும்
எமது பாடசாலை மாணவி செல்வி சிவாபிரபு இசைப்பிரியா 9A சித்தி பெற்றதை தொடர்ந்து மாணவி தொடர்பில் பல்வேறு வதந்திகள் பல்வேறுபட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றது.
இசைப்பிரியா கிளி/விவேகானந்த வித்தியாலய மாணவியாவார்.இவரது தாயார் சங்கீத பாட ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிவதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே வசித்தும் வருகின்றனர்.
#இந்நிலையில்_இவர்_தனது_தாயாரை_இழந்து_முல்லைத்தீவில்_பாதுகாவலருடன்_வசிக்கின்றார் என்பதான உண்மைக்குப்புறம்பான செய்தி வெளியாகியிருப்பது வேதனைக்குரியதாகும்.
#செய்தியில்_குறிப்பிடப்பட்ட_செய்தி_வாசிப்பாளர் #இசைப்பிரியாவிற்கும்_எமது_பாடசாலை_மாணவி_இசைப்பிரியாவிற்கும்_எவ்வித_உறவுநிலைத்தொடர்பும் இல்லை.
எனவே உண்மைகளை வெளியிடும் என மக்கள் நம்பிக்கையோடு பார்க்கப்படும் சமூக ஊடகங்கள் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதனை பாடசாலைச்சமூகம் கவலையுடன் சுட்டிக்காட்டுவதுடன் வன்மையாக கண்டிக்கின்றோம்.




