உலகத்தை உலுப்பி எடுக்கப் போகும் பஞ்சம்!! துப்பாக்கிக்காக வரிசையில் நிற்கும் அமெரிக்கார்கள்!!
நாமல்லாம் காய்கறி வாங்க வரிசையில நின்னா, அமெரிக்கர்கள் துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கிறார்கள். கொரோனா பீதிக்குப் பிறகு, அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அங்கு குடிமக்கள் துப்பாக்கி வாங்குவது மிகவும் எளிது என்பதால், வீட்டுக்கு ஒரு துப்பாக்கி என்ற கணக்கில் வாங்கிக் குவிக்கிறார்கள்.
2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சர்வேயின்படி, உலகிலேயே குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்காதான். அங்கு 100 பேருக்கு 120 பேரிடம் துப்பாக்கி இருக்கிறது. அதாவது, மக்களின் எண்ணிக்கையை விட துப்பாக்கி எண்ணிக்கை அதிகம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 26 லட்சம் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர் அமெரிக்கர்கள். இதில், 85 சதவிகித துப்பாக்கிகள் 2019 மார்ச் மாதத்துக்குப் பிறகு வாங்கப்பட்டவை.
எதுக்கு துப்ப்பாக்கி வாங்குறீங்கன்னு கேட்டா பலர் சொல்லும் பதில்…
‘’இருக்கும் நிலைமையை பார்த்தால் ஒரு நிச்சயமற்ற தன்மை வருவது உறுதி போல தெரிகிறது. அப்போது வன்முறையும், சூறையாடலும், அடித்துப் பிடுங்குவதும் நடக்கலாம். அத்தகைய சூழலில் தற்காத்துக்கொள்ள துப்பாக்கி பயன்படும்’’ என்கிறார்கள்.
எனினும், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்தும் கலாசாரம் ஏற்கெனவே மிக, மிக அதிகம்தான். இப்போது, கொரோனாவால், வழக்கத்தை விடவும் அது அதிகரித்துள்ளது.
‘’அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் நாட்டில் அதிகரிக்கும்போது, எங்களிடம் துப்பாக்கி விற்பனையும் அதிகரிக்கும். முதல்முறையாக, ஒரு வைரஸ் காரணமாக துப்பாக்கி அதிகம் விற்கிறது’’ – என்கிறார் ஒரு Gun விற்பனை நிலைய மேலாளர்.
துப்பாக்கி வாங்கும் முன்பு Background check என்பது ஒரு நடைமுறை. கொரோனா அச்சம் தொடங்கிய மார்ச் மூன்றாவது வாரத்தில் மட்டும் Background check செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12 லட்சம் பேர். ஒரு Background check செய்துவிட்டால், அதைக்கொண்டு, ஒருவர் பல துப்பாக்கிகள் வாங்க முடியும். எனவே Background check எண்ணிக்கையை விட துப்பாக்கி விற்பனை அதிகமாகவே இருக்கும்.

