புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் விபத்து!! இருவர் படுகாயம்!! (Photos)

முல்லைத்தீவு விசுவமடு தேக்கங்காட்டு பகுதியில் ஒரு வாகனத்துடன் வீட்டிற்கு உணவுப் பொருட்கள் வாங்கிச் சென்ற பைக் மோதியுள்ளது. காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதி வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அதி ஆபத்தான வளைவுகள் காணப்படுகின்றமையினால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கயஸ் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வந்தவர்களே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

விபத்துத் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: one or more people, shoes and outdoorImage may contain: motorcycle and outdoorImage may contain: one or more people, shoes and outdoorImage may contain: motorcycle and outdoorImage may contain: car, tree and outdoorImage may contain: car and outdoor