புதினங்களின் சங்கமம்

முழு இலங்கைக்கும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது!!

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.