புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனாவால் இத்தாலியில் பேரழிவு; 24 மணி நேரத்தில் 250 போ் உயிரிழந்தனா்!

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 250 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துவிட்டதாக இத்தாலிய சுகாதர சேவை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனா்.

அத்துடன் இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,266ஆக உயா்ந்துள்ளது.

அத்துடன் இத்தாலியில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை காலை வரையான உத்தியோகபூா்வ தகவல்களின் பிரகாரம் 17,660 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொற்றுநோய் உச்சத்தில் இருந்த காலத்தை விட அதிகமானவா்கள் இப்போது ஒவ்வொரு நாளும் இத்தாலியில் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

கொரோனா என்ற இந்தப் பேரழிவை தொடர அனுமதிக்காதீா்கள். நோயுற்றவா்களைத் தனிமைப்படுத்துங்கள் எனவும் அவா் உலகுக்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் கொரோனா தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் டெட்ரோஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.