திருகோணமலையில் கலியாணத்துக்காக பிரதேச செயலகத்தை மூடிய அரச ஊழியர்கள்!! (Photos)
திருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றவர்கள், அங்கு ஊழியர்கள் இல்லாத காரணத்தால் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்குத் திருமணம் இடம்பெற்ற நிலையில், அத் திருமணத்துக்காக அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் சகலரும் சென்றுள்ளமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
குறிப்பாக குச்சவெளி, திரியாய், கும்புறுப்பிட்டி, வடலிக்குளம், பல்லவக்குளம் போன்ற இடங்களிலிருந்து சென்ற மக்களே தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவதிப்பட்டுள்ளனர்.
ஐ.தே.க.வில் யார் யாருக்கு என்ன பதவி? வௌியானது தகவல்!
ஆயிரம் ரூபா விவகாரம்; அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு!
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்; எப்படி வந்தது?
இதனால், குச்சவெளி பிரதேச செயலகத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்றிருந்தவர்கள், அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதால், தாங்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் எனக் கவலை தெரிவித்தனர்.