பெற்றோலை ஊற்றி பண மரம் வளர்க்கும் யாழ். முதலாளிகள்
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட போர் பதற்றம் சம்பந்தமான செய்திகளால் யாழ்ப்பாணத்தின் பெற்றோல் முதலாளிகளுக்கு பண மரம் காய்க்க தொடங்கி உள்ளது.
இப்பதற்றம் காரணமாக பெற்றோலுக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்படும் என்று யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் இவர்களால் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் வேறு எந்த இடங்களிலும் பெற்றோலுக்கு எந்த தட்டுப்பாடும் உண்மையில் நேராத நிலையில் யாழ்ப்பாணத்திலேயே இது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.
யாழ்ப்பாண பொதுமக்கள் எவரும் இவ்வாறான வதந்திகளுக்கு இனி மேல் பலிக்கடா ஆக வேண்டாம் என்று கோரப்படுகின்றனர்.











