புதினங்களின் சங்கமம்

யாழ் பஸ்சில் பாலியல் சேட்டை!!சிங்களவனின் உறுப்பை ஊசியால் குத்தி படுகாயப்படுத்தி யுவதி!!

கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பஸ் ஒன்றில் தன்மீது பாலியல் சேட்டை விட்ட தனியார் நிறுவனத்தில் அதிகாரித் தரத்தில் கடமையாற்றும் சிங்களவன் ஒருவனின் கைகள் மீது யுவதி ஊசியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் செல்ல வெள்ளவத்தைப் பகுதியில் யுவதியும் அவரது தாயாரும் ஏறி தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். அதன் பின்னர் கட்டுநாயக்கா பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த சிலரும் குறித்த பஸ்சில் ஏறியுள்ளனர். பஸ் சிலாபம் பகுதியை அடைந்த போது வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தில் சிறுவன் ஒருவன் யுவதியின் ஆசனப்பகுதியில் வாந்தி எடுத்துள்ளான். இதனால் யுவதி பின்னால் இருந்த இன்னொரு சீற்றில் இருந்து வந்துள்ளார். இந் நிலையில் அந்த ஆசனத்தின் பின்பகுதியில் தனித்திருந்த ஆசனத்தில் சிங்களவன் இருந்து யுவதியுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. பொறுத்துப் பார்த்த யுவதி தன்னிடம் இருந்த ஊசியால் அவனது கையைப் பிடித்து பல இடங்களில் குத்தி கிழித்துள்ளான். சிங்களவன் அலறத் தொடங்கவே பஸ்சில் விளக்குகள் ஒளிரப்பட்டு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்களவன் எதற்காக அலறினான் என அறிய முற்பட்டு பலரும் அவனுக்கு அருகில் சென்ற போது அவனது கைகளில் இரத்தம் வழிந்து கொண்டிருந்துள்ளது.

எதற்காக இவ்வாறு இரத்தம் வழிகின்றது என கேட்டபோது முதலில் அது தொடர்பாக அமைதியாக இருந்த சிங்களவன் சாரதி தொடர்ச்சியாகக் கேட்கவே ‘முன் ஆசனத்தில் இருந்த யாரோ தான் நித்திரை கொண்டிருந்த போது இவ்வாறு செய்துள்ளார்கள் என கூறியுள்ளான். அதன் பின்னர் முன் ஆசனத்தில் இருந்த யுவதி நடந்த சம்பவத்தை தெரிவித்த போது நடத்துனர் குறித்த சிங்களவனை எச்சரித்து தான் அமர்ந்து செல்லும் முன் ஆசனத்தில் அமருமாறு கூறியதுடன் பஸ்சில் வைத்திருந்த துணியால் அவனது இரத்தம் வழிந்த கையிற்கும் கட்டுப் போட்டுள்ளார். இதே வேளை வவுனியா வரும்வரையில் குறித்த சிங்களவன் உரத்த குரலில் யுவதியை தாறுமாறாக பேசியபடி வந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த சிங்களவன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கொழும்பு தலைமையகத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றுவதாகவும் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வரும்போதே யுவதியுடன் சில்மிசத்தில் ஈடுபட்டு வாங்கிக் கட்டியதாகவும் தெரியவருகின்றது.