நுவரெலியா, நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு விடுமுறையைக் கழிப்பதற்காகவும், இயற்கையை ரசிப்பதற்காகவும் ஆற்றுக்குச் சென்ற இந்த இளம் உயிர்கள், நீரின் ஆழம் மற்றும் சுழியோட்டப் பகுதிகளை அறியாமல் இறங்கியதன் காரணமாக இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், மற்றையவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் ஆவர்.





