ஆட்டோ ஓட்டும் வயது குறைந்த காவாலிகளுக்கு ஆப்பு சொருகப் போகும் அரசாங்கம்!!
முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்தார்.
பாடசாலைப் படிப்பை முடித்தவுடன் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கர டாக்சி தொழிலில் நுழையக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்களைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஹெவாகே வலியுறுத்தினார்.
“முச்சக்கர வாகனத் தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். இளைஞர்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் உடனடியாக முச்சக்கர வாகனத்தை சாலைக்குக் கொண்டு செல்லக்கூடாது. அதனால்தான் நாங்கள் கல்வியில் மாற்றங்களைச் செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

