முல்லைத்தீவு கடலில் மூழ்கி கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சுபஈசன் பலி!
கனடாவிலிருந்து தாய்நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த நேரம் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
51 வயதுடைய யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த பூபாலசிங்கம் சுபஈசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கனடாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 2 நாட்களே ஆன நிலையில், தனது நண்பர்கள் பேருந்தில் முல்லைத்தீவு பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
இதன்போது, நண்பகல் வேளையில் நாயாறு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உ**யி**ரிழந்துள்ளார்.
ச**டலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

