புதினங்களின் சங்கமம்

ரூ. 2.5 கோடி பெறுமதியான “ராவண கல்/சுலைமான் கல்லுடன்” இருவர் கைது!*

கிண்ணியா – கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் வைத்து ரூபா இரண்டரை கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற அபூர்வ கல்லொன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது!

நேற்று (23.07.2026) மாலை 10:00 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலேயே இக்கல் கைப்பற்றப்பட்டது. அதனுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

​கைப்பற்றப்பட்ட கல்லின் விவரங்கள்:
​நீளம்: 4 அங்குலம்
​சுற்றளவு: 6 ½ அடி
​நிறை: 550 கிராம்.

​கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x