யாழில் சுவிஸ் குடும்பஸ்தரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்! பொலிசார் கூறுவது என்ன?
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.
குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை (06) யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.

