யாழில் பயங்கரம்! ஒருவர் வெட்டிக் கொலை!
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை கிழக்கில் ஒருவர் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இருபாலை கிழக்கு, மடத்தடி பகுதியை சேர்ந்த ஒருவரே கொல்லப்பட்டார்.
கோப்பாய் பொலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
