அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய விசேட அறிவிப்புகள்.
?அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு,
?இம் மாதம் முதல் (ஜனவரி) சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கப்படும்.
?அரச ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.
?அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
?மாதம் 15 கிலோ கோதுமை மா ஒவ்வொரு தோட்ட குடும்பத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 80 ரூபா படி வழங்கப்படும் .
?20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
?உரத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பயிர் இழப்பு காரணமாக எதிர்காலத்தில் நெல் விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 75 ரூபா விலை நிர்ணயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் என நிதி அமைச்சர் தெரிவிப்பு.

