Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் கோயில் திருவிழாவில் வெடிக்காத வெடியை பழுதுபார்க்க முற்பட்ட சிறுவன் பலி ! நடந்தது என்ன?

மட்டு’வில் கோயில் திருவிழாவில் வெடிக்காத வெடியை பழுதுபார்க்க முற்பட்ட சிறுவன் பலி ! நடந்தது என்ன?

மட்டு கிரானில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றில் வெடிக்காத வெடியைப் பார்க்கச் சென்ற சிறுவன் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு பிரம்படித்தீவு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் திடீரென வெடி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று ( 11) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் முருங்கன்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர்.

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments