இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.குறிப்பு – இங்கு எல்லா பஸ்களும் குறிப்பிடப்படவில்லை
பொதுப் போக்குவரத்தில் பஸ்களில் மதகுருமாருக்கு… அங்கவீனர்களுக்கு… கர்ப்பிணி தாய்மாருக்கு என உத்தியோகபூர்வமாக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் சில ஓட்டுனர், நடத்துனர்களால் சில வகைப் பெண்களுக்கு என்று ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டு இருப்பதை அடிக்கடி தொலைதூர பஸ்களில் பயணப்படும் நம்மில் சிலர் அவதானித்திருப்பார்கள்.
பஸ்ஸில் ஏறியவுடன் முதலாவது ஆசனத்தில் ஒரு பை யோ அல்லது தலையணை யோ அல்லது தண்ணீர்ப் போத்தலோ வைத்து இடம்பிடிக்கப்பட்டிருக்கும். மேலும் சில சமயங்களில் பஸ்ஸில் அதிக சனநெரிசல் இருக்கும் சந்தர்ப்பத்தில் கூட யாருக்கும் இருப்பதற்கு கொடுக்கப்படுவதில்லை. நடத்த்குனர்களின் அநாகரீக பேச்சு, சண்டியத்தனமான உடைகள் போன்றவற்றால் பலர் இதனை தட்டிக்கேட்க முன்வருவதில்லை.
குறித்த இடங்களில் அதிக ஒப்பனை, கவர்ச்சியான உடைகள் அணிந்து நிற்கும் பெண்கள் அப் பேரூந்துகளில் ஏற்றப்பட்டு அவ் ஆசனம் கொடுக்கப்படும். அவர்கள் பெரும்பாலும் ரிக்கெட் எடுப்பதும் இல்லை. அவர்கள் இறங்கும் வரை ஓட்டுனரும், நடத்துனரும் அப் பெண்ணிடம் அரட்டை அடித்தபடி பயணம் தொடரும்…
கவர்ச்சியான உடை, ஒப்பனை அப்பெண்ணின் இஷ்டம்…. அவர்களுடன் கதைப்பதை கூட ஓட்டுநர், நடத்துனரின் உரிமையாக வைத்துக் கொள்வோம்… ஆனால் ஆசனம் ஒதுக்குவது கடுமையான விதிமுறை மீறலாகும்.





