புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியா தமிழ் பொறியியலாளர் குடும்பமாக நேபாள வெள்ளப் பெருக்கில் மாயம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
கைலாஷ் மலை யாத்திரைக்காக ‘ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்’ அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
திபெத் – நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளமையாகவும் ,
இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், நேபாளப் பகுதியில் குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்களைத் தேடும் பணியில் அவசர அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளா்..
காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தமிழ் அவுஸ்திரேலிய சமூகமும் உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x