செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு இளம்பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து காயம்!
இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் பயணம் செய்த வெளிநாட்டு இளம்பெண் ஒருவர், அம்பேவெல பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்றபோது தொடருந்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

