உறுப்பின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம்… உயிரைப் பறித்த சோகம்! கேகாலையில் சம்பவம்!
கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார்.
சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

