யாழ் பல்கலவிக்கழக மாணவிகளே!! வெற்றுத் தொடையின் (Null Set) இடை வெட்டுக்குள் வாழைப்பழம் இருக்குமா? கணிதம் பகுதி 2
இரண்டு தொடைகளுக்கு இடையே பொதுவான உறுப்புகள் எதுவுமே இல்லை எனின், அவற்றின் இடைவெட்டு ஒரு வெற்றுத் தொடை (Null Set / Empty Set) ஆகும்.
கணிதம் 1ம் பகுதி
ஒரு வடையும் இரு இட்லிகளும் சாப்பிடுவதற்கு ஆண்கள் படும் பாடுதான் என்னவோ??
இன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூலிக்கு மாரடிக்கும் கோஸ்டி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. யாரிடமோ பணத்தை வாங்கிவிட்டு வந்து கூவுகின்றார்கள் என்பது நேரடியாகவே அறிய முடிகின்றது.
முன்னாள் பீடாதிபதி ரகுராம் அந்தப் பெண்ணின் மீது மோகம் கொண்டது சரியா? தவறா? அல்லது இருவர் மீதும் தவறா? என்பது தொடர்பாக இலக்கிய ரீதியாக கம்பவாருதிபோல் வியாக்கியானம் செய்து விரிவாக இன்னுமொரு இணைப்பில் தருகின்றோம்.
ஆனால் அந்த திருவிளையாடலை வைத்து ஏதோ ஒரு தரப்பு இலாபம் காண முற்படுகின்றது தெளிவாகத் தெரிகின்றது. அதே நேரம் ரகுராம், குரங்கின் கையில் இருக்கும் புண் போல குறித்த சம்பவத்தை நீதிமன்றம் வரை கொண்டு போய் முட்டாள் வேலை செய்திருப்பதும் காணக்கூடியதாக உள்ளது.
சரி…. வம்பனின் யாழ் பல்கலைக்கழக சிறப்பு ஜல் ஜில் பகுதி 2 ற்கு வருகின்றோம்….
1983ம் ஆண்டு காலப்பகுதி.யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதியாக இரகுநாதர் கனகசுந்தரம் சிறப்பாக செயலாற்றி வந்தார். இவர் காரைநகரைச் சேர்ந்தவர். சிறந்த கல்விப் புலமையாளன். அத்துடன் சிக்கலான பல முடிச்சுக்களை இலகுவாக அவிழ்த்து விடக் கூடிய புத்திக் கூர்மை மிக்கவர். யாழ்ப்பாணம் மட்டுமல்லாது ஹ மருத்துவத்துறையில் உலகம் எங்கும் அறிந்த ஒரு நபர்.
இவர் பதவி வகித்த காலத்திலேயே ஆடிக் கலவரம் ஏற்பட்டு கொழும்பில் பெருமளவு தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டும் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் இன ஒடுக்கம் செய்யப்பட்டார்கள். அக் காலப்பகுதியில் கொழும்பு மற்றம் கண்டிப் பல்கலைக்கழகங்களில் கற்று வந்த மருத்துவபீடத்தைச் சேர்ந்த அனைத்து வருட தமிழ் மாணவர்களும் யாழ்ப்பாணத்திற்கு தப்பி ஓடி வந்தார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது யாழ் மருத்துவபீடம்.
அந்தக் கால கட்டத்தில் மருத்துவபீட 3ம் வருடத்தில் கற்ற மாணவர்களுக்கு Clinical Rotations பயிற்சி யாழ் போதனா வைத்தியசாலையில் யுத்த கலவரங்களுக்கு மத்தியில் பெரும் சிரமத்துடன் அரைகுறையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக் காலப்பகுதியில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அங்கு விஜயம் மேற்கொண்டு மாணவர்களுக்கு Clinical History Taking, Physical Examination போன்ற பயிற்சிகளை வழங்கி வந்தார்கள்.
கண்டிப் பல்கலைக்கழகத்தில் 3ம் வருடம் கற்று வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவரும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழத்தில் இணைந்தார். இவர் மீது மருத்துவத்துறை விரிவுரையாளர் ஒருவர் காமன் அம்பு எய்வதற்கு குறி வைத்துவிட்டார். யுத்த கலோபரத்தால் தளம்பல் நிலையில் இருந்த யாழ் பல்கலைக்கழக சூழ்நிலையில் தங்குமிடம் இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த குறித்த மாணவியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அம் மாணவிக்கு தனது உறவினர்களான வயோதிப தம்பதிகளின் வீட்டில் தங்குமிடம் மற்றும் சாப்பாட்டு வசதி செய்து கொடுத்திருந்தார். விரிவுரையாளர் குடும்பஸ்தர். 2 பி்ள்ளைகளின் தந்தை. 30 வயதுக்கு மேற்பட்டவர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் Clinical Rotations பயிற்சியில் ஈடுபட்ட பின் சோர்வுடன் வீடு திரும்பும் அந்த மாணவியை மாலை வேளைகளில் குறித்த விரிவுரையாளர் அவரது றுாமில் சந்தித்து வந்தார்.
1983ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அந்த மாணவி பீடாதிபதி கனகசுந்தரத்திடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விலாவாரியாக கூறினாள்.
மாணவியிடம் மாலை வேளை செல்லும் விரிவுரையாளர் மாணவிக்கு சில வேளைகளில் அந்தக் காலத்தில் பிரபலமான எலிபன்ட் பார்லி எனப்படும் போத்தலில் விற்கப்படும் குளிர்பாணத்தை கொண்டு வந்து அதற்குள் மாணவிக்கு தெரியாது டயஸபாம் மருந்தை இட்டு மாணவியைக் குடிக்கச் செய்து மாணவியை துாங்கச் செய்து உடலுறவு மேற்கொண்டு வந்ததாகவும் அதனால் தான் கர்ப்பமானதாகவும் மாணவி அழுதழுது கூறியிருந்தாள்.
மாணவியின் முறைப்பாடு துணைவேந்தர்வரை சென்றது. அதற்குள் மாணவியை அமைதிப்படுத்தும் நடவடிக்கையில் மருத்துவபீட பீடாதிபதி ஈடுபட்டார். அக் காலப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த ஈழப்போராட்ட தீ யாழ் பல்கலைக்கழகத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாணவியின் இந்த முறைப்பாடு அந்த தீயில் குளித்து நிற்கும் மாணவர்களுக்கு தெரியவிடாது தடுப்பதற்கு பீடாதிபதி கடும் முயற்சி செய்தார். குறிப்பாக மாணவியைக் கர்ப்பமாக்கிய விரிவுரையாளருடன் அடிக்கடி மோதிக் கொள்ளும் ராஜினி திராணகமவுக்கு இந்த தகவல் தெரியாதவாறு மறைக்கப்பட்டது. அந் நேரத்தில் ராஜினி திராணகம Anatomy பிரிவின் விரிவுரையாளராக செயற்பட்டு வந்திருந்தார். ஆனால் அவர் மாணவியின் சிக்கலான நேரத்தில் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்ததால் நிலைமை பாரதுாரமாக மாறவில்லை.
மாணவியும் விரிவுரையாளரும் துணைவேந்தரின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். துணைவேந்தருடன் இன்னொரு பீடத்தின் பீடாதிபதி மற்றுமொரு பேராசிரியர் ஆகியோர் இருந்தார்கள். விசாரணைகளின் போது மாணவி முழுச் சம்மதத்துடனேயே விரிவுரையாளருடன் உறவு கொண்டிருந்தது தெரியவந்தது. மாணவி தன்னை திருமணம் செய்யுமாறு அறைக்குள் நின்று விரிவுரையாளரை கெஞ்சிக் கொண்டிருந்தாள். விரிவுரையாளர் மௌமாக நின்றார். அந் நேரத்தில் மாணவி 4 மாத கர்ப்பம். தனது செயற்பாடு தொடர்பாக மனைவி அறிந்தால் தற்கொலை செய்துவிடுவாள் என விரிவுரையாளர் அழத் தொடங்கினார். இரு தரப்பையும் சமாளிப்பது பெரும் தர்மசங்கடமாகியது. மாணவி கருவைக் கலை மறுத்தார். இறுதியி்ல் மாணவியின் குழந்தைக்கு தந்தை விரிவுரையாளர் என்றே பதியப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதுடன் மாணவியும் விரிவுரையாளருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. அதே வேளை மாணவியின் சகல செலவுகளுக்கும் விரிவுரையாளரே பொறுப்பு என அவரிடம் உறுதிப்படுத்தப்பட்டது. மாணவி மட்டக்களப்புக்கு அனுப்ப்பட்டாள். பெற்றோரிடம் கர்ப்பம் தொடர்பாக கூறப்பட்டு அதற்கு காரணமான காதலன் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவிக்கபட்டது.
இக் காலப்பகுதியில் மருத்துவ பீட பீடாதிபதி கனகசுந்தரம் வெளிநாடு சென்றுவிடவே சிவஞானசுந்தரம் பீடாதிபதியாக பொறுப்பேற்றார். அக் காலப்பகுதியில் குறித்த மாணவி குழந்தைப் பேற்றின் பின்னர் அடுத்த ஆண்டு மாணவர்களுடன் கல்வி கற்று தனது மருத்துப் படிப்பை பூர்த்தி செய்தார். முதல் மருத்துவ நியமனத்தை தென்பகுதியில் பெற்று சேவை செய்த குறித்த மாணவி திருமணம் செய்யாது தனது மகனை வளர்த்து தற்போது மகனையும் மருத்துவராக்கியுள்ளார். காதலனால் கைவிடப்பட்டவள் என அக்காலத்தில் சகலரும் அறிந்திருந்தனர். ஆனால் யார் காதலன் என்பதை அந்த மாணவி யாருக்கும் கூறவில்லை. அந்த மாணவி ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். இவரை கர்ப்பமாக்கிய அந்த விரிவுரையாளர் 75 வயது தாண்டியும் அவுஸ்ரேலியாவிலிருந்து தற்போதும் தமிழ்த்தேசியத்தை ஆழமாக நேசித்து வருகின்றார்.
மன்மத லீலைகள் தொடரும்.
தொடரும்

