புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மயூரன் பிருத்தானியாவில் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் நவசிவாயம் மயூரன் பிருத்தானியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் வடக்கு மாகாண திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி தொழில் வாய்ப்புக்காக லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.