புதினங்களின் சங்கமம்

மோட்டார்சைக்கிள் விபத்தில் பிரதேசசபை செயலாளர் பரிதாபகரமாக பலி!!

திருக்கோவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தி.சாயிதாசன்(33) உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று, பனங்காடு, சிவன்கோவில் வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கராசா சாயிதாசன் அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிவந்த நிலையில் அதிசிறப்புத் தகைமை சித்தியெய்தி 2018 ஏப்ரல் இரண்டில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளராக தனது முதற்கடமையை பொறுப்பேற்று கடமையாற்றிவந்த நிலையிலேயே நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.