Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவில் பெண் விதானையான சகோதரியை கத்தியால் குத்திவிட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து பலியான மயூரன்! நடந்தது என்ன?

முல்லைத்தீவில் பெண் விதானையான சகோதரியை கத்தியால் குத்திவிட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து பலியான மயூரன்! நடந்தது என்ன?

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, சகோதரன் தனது கிராம சேவையாளரான சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சகோதரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் பயத்தின் காரணமாக யாரும் இல்லாத நேரத்தில் குமுழமுனையில் உள்ள தனது வீட்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களாக காணாமல்போன அவரை உறவினர்கள் தேடிய நிலையில், நேற்றையதினம் (12) வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 32 வயதுடைய செல்வராசா மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.