புதினங்களின் சங்கமம்

காட்டெருமை மற்றும் மான் இறைச்சிகளுடன் சொகுசு காரில் பிடிபட்டவர்கள் யார் யார்?

பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளுடன் இணைந்து இன்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை மற்றும் மான் இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளை நிற கார் ஒன்றில் இந்த இறைச்சியைக் கடத்திச் சென்றபோது, பானமை சாஸ்திரவேல பகுதியில் வைத்து இவர்கள் பிடிபட்டனர். இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன. படகுகள் மூலம் சென்று வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (2026.03.14) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 2026.03.24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளான பி.எம்.ஜி.சி. பண்டார, டி.எம்.டி.எல். திஸாநாயக்க, உதவி அதிகாரி விக்கிரமரத்ன, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கே. ஹனோஜன், கள உதவியாளர் ஆர்.எம். லக்ஷ்மன், சாரதிகளான அத்தநாயக்க மற்றும் ரசிக ஆகியோருடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No photo description available.No photo description available.May be an image of car