புதினங்களின் சங்கமம்

யாழில் சிறைக்குச் சென்றும் திருந்தாத காவாலிகள்!! கொக்குவிலில் நடந்த தாக்குதல் சம்பவக் காட்சி!! வீடியோ

யாழ் கொக்குவில் பகுதியில் மரக்கறி வாங்கச் சென்றவர் மீது விஜித் என்ற ரவுடியும் அவனது கும்பலும் தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகள் தரப்பட்டுள்ளன. குறித்த விஜித் என்ற காவாலி பல வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவன் என்றும் சில நாட்களுக்கு முன்னரே சிறைக்குள் இருந்து பிணையில் வெளியே வந்தவன் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் தொடர்ச்சியாக இவன் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசாரால் இவன் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே வெளியில் வருகின்றான் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு காவாலியான கோண்டாவிலைச் சேர்ந்த சரன் என்பவனுடன் இவன் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களைச் செய்வதாகவும் போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

கண்ணாடி போட்டவன் விஜித் மற்றவன் சரண்