புதினங்களின் சங்கமம்

ஹிஸ்புல்லாவுக்கு வந்த வித்தியாசமான ஆசை இது!!

எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் முஸ்­லிம் மக்­கள் சார்­பில் கள­மி­றங்­கு­
வ­தற்கு கிழக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் ஹிஸ் புல்லா திட்­ட­மிட்­டுள்­ளார்.

அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம் மக்­கள் மீது நடத்­தப் ப­டும் அடக்­கு­மு­றை­களை
உல­கத்துக்கு ஓர­ணி­யில் நின்றுஎடுத்­துச் சொல்­ல­வும், இரு முதன்­மைக் கட்­சி­க­ளின்
மீதான முஸ்­லிம் மக்­க­ளின் நம்­பிக்­கை­யின்­மை­யைப் பகி­ரங்­க­மாக
வெளிப்­ப­டுத்­த­வும் இவ்­வாறு அவர் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்­ளார் என்று
தெரி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பில் ஹிஸ்­புல்லா உத­ய­னுக்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:
அரச தலை­வர் தேர்­த­லில் கள­மி­றங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளேன். புத்­தி­ஜீ­வி­கள்,
இளை­ஞர்­கள் எல்­லோ­ரும் கள­மி­றங்­குங்­கள் என்று கூறு­கின்­ற­னர். இது தொடர்­பாக
தொடர்ந்து பேசிக்­கொண்­டுள்­ள­னர். நேற்­றும் மார்க்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள், சமூக
மட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், முஸ்­லிம்­கள் என்று ஏரா­ள­மா­ன­வர்­கள் கேட்­டுள்­ள­னர்.
வற்­பு­றுத்­து­கின்­ற­னர். எனி­னும் இது தொடர்­பில் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றேன்.
இன்­னும் ஒரு சில நாங்­க­ளில் தீர்­மா­னிப்­பேன் – என்­றார்.

எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாத­ம­ள­வில் அரச தலை­வர் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்­ளது என்று
அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் பொது­மக்­கள் முன்­ன­ணி­யில் இருந்து முன்­னாள்
பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யில்
இருந்து அனு­ர­கு­மார திச­நா­யக்­க­வும் தெரிவு செய்­யப்­பட்­டள்­ள­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, மற்­றும், சுதந்­திக் கட்­சி­யி­டம் இருந்து இது­வரை
உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­வித்­தல்­கள் வர­வில்லை. இம்­முறை அரச தலை­வர்
தேர்­த­லில் பல முனைப் போட்­டி­கள் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் வாக்­கு­கள்
சிதை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வா­ற­ன­தொரு நிலை­யில்
ஹிஸ்­புல்­லா­வும் கள­மி­றங்­கு­வார் என்ற பேச்­சுக்­க­ளும் வெளிக்­கி­ளம்­பி­யுள்­ளன.