பருத்தித்துறையிருந்து கொழும்பு சென்ற பேருந்து தெதுரு ஓயாவில் விபத்து – 15 பேருக்கு காயம் Video
பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்ததுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

