புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கவனக் குறைவால் தனது ஒரு வயது மகனை நசுக்கிக் கொன்ற டிப்பர் சாரதி!!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், இன்றைய தினம் (18.04.2025) தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயதுடைய பச்சிளம் சிறுவன், தந்தை கவனிக்காத நிலையில் பின்னோக்கி செலுத்தப்பட்ட டிப்பர் வாகனமால் மோதப்பட்டுள்ளார்.

வாகனத்தின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், டிப்பர் வாகனம் பின்னோக்கி நகர்ந்தபோது அதனால் மோதப்பட்டு உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.