யாழில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்…!
யாழ்ப்பாணம் – குருநகர் இறால் வளர்ப்புத்திட்டம் பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவினர் இனைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். முப்பது கிலோ நிறையுடைய கடலாமையை உயிருடனும் இருபது கிலோ கடலாமமை இறைச்சியுடனும் 57வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

