கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவரிடம் புறோக்கர் 85 லட்சம் சுருட்டியது எப்படி?
யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து வந்த புலம்பெயர் நபரொருவரின் 85 இலட்சம் ரூபா பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கனடாவிலிருந்து வருகை தந்த புலம்பெயர் நபரொருவர் தெல்லிப்பழையில் தங்கியுள்ளார்.இதனையடுத்து, காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர் ஒருவருடன் தொடர்பினை பேணியுள்ளார்.குறித்த புலம்பெயர் நபர் 4 நாட்களின் பின்னர் தனது பணத்தினை பார்த்துவிட்டு பணத்தினை காணாத நிலையில் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.