புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் மருத்துவப் புலி மரணம்! புகைப்படங்க்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும், விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும்,
கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W Jeyakularajah ( வைத்தியர் ஜெயகுலராஜா)
அவர்கள் இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் நாளை 2024.06.17 திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.
May be an image of 1 person and smilingMay be an image of 1 person and textMay be an image of 3 people