யாழில் இன்று மாலை புகையிரதத்துடன் வான் மோதி அப்பளமாகியது!! தந்தையும் 6 மாத குழந்தையும் பலி!! Photos
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வேனொன்று விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து புதன் கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இணுவிலை சேர்ந்த சயந்தன் (31) என்பவரும் அவரது 6 மாத குழந்தையுமே உயிரிழந்தவர்களாவார்…
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




