புதினங்களின் சங்கமம்

யாழ் பொற்பதிப்பிள்ளையார் கோவிலில் நடக்கும் அலங்கோலம்!!அக்காவின் ஆக்ரோசம்….!! வீடியோ

யாழ் கொக்குவில் பொற்பதிப்பிள்ளையார் கோவில் ஊர்மக்களுக்காக அல்லது கோவிலைப் பராமரிக்கும் ஐயர் குடும்பத்திற்கா சொந்தம் என்று தற்போது அடிபிடி நடக்கத் தொடங்கியுள்ளது. கடந்த தைப்பூசத்திருநாளில் பிள்ளையார் கோவிலை கும்பாபிசேகம் செய்வதற்காக இடித்துள்ளார்கள் ஐயர் தரப்பினர். ஆனால் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை குறியாகக் கொண்டு இவர்கள் கோயிலை இடித்து புதிதாக கட்டப்போகின்றோம் என கூறி பெருமளவு பணத்தை சுருட்ட நினைக்கின்றார்கள் என ஆலயத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறுகின்றார்கள். இந் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து பிள்ளையாரின் மறு வடிவமாக உள்ள யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கோயிலுக்குள் நுழைந்து தலையிட்டுள்ளார். அங்கஜனின் குடும்பத்திற்கிடையேயே பெருமளவு சிக்கல்கள் தீர்க்கப்படாது உள்ளது. அங்கஜனின் சித்தாப்பாவுடன் அங்கஜன் சண்டை என பலரும் கூறிவருகின்றார்கள். அத்துடன் அங்கஜனின் தம்பி குஸ் போதைப்பொருளை யாழ்ப்பாணத்திற்கு அறிமுகம் செய்ய முற்பட்டு 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது செய்யபட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையில் பிள்ளையாருக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்க்க அங்கஜனால் முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதுான் பார்க்க வேண்டும்.

May be an image of 6 people and temple

May be an image of temple