மனித கருவை அழிக்கும் நடவடிக்கைக்கு!! யாழ் மாநகரமுதல்வரின் நடவடிக்கைக்கு கிளர்ந்தெழுந்த மக்கள்!! நடந்தது என்ன? (Video)
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப
அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து
பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்தக் கோபுரம்
அமைக்கப்பட்டடால், அதிலிருந்து வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சினால் கர்ப்பிணிப் பெண்கள்
சிறுவர்கள் உள்பட பிரதேச மக்கள் பாதிக்கப்படுவர். புற்றுநோய் உண்டாகும்” என்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர்.
“தற்போது 4ஜி தொழில்நுட்ப தொலைத்தொடர்பு கோபுரங்கள் இன் ஆல் சிட்டுக்குருவி இனமே
அழிந்து வரும் நிலையில் 5ஜி தொழில்நுட்பம் மனித மூளையின் தாக்குவதுடன் மூளைப்
புற்றுநோயை உண்டாக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நாம் அச்சப்படுகின்றோம். எமது பிரதேசத்துக்குள் இவ்வாறு, தனியார் தொலைத்
தொடர்பு நிறுவனம் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு நாம் ஒருபோதும்
அனுமதிக்கப் போவதில்லை. இந்த கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்” என்று
கோரிக்கை விடுத்தனர்.