யாழில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் அவற்றை விற்பவர்களும் நடாத்திய சுதந்திரதினப் பேரணி! (வீடியோ)
ஐஸ், மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பிரதான முகவர்களில் ஒருவன் என சந்தேகிக்கப்படும் அருண் சித்தார்த் எனும் போலி அரசில்வாதியும் அவனது அடியாட்களும் அரசாங்கத்தின் சுதந்திரதின விழாவை பேரணியாகக் கொண்டாடிய காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. குறித்த அருண்சித்தார்த் போதைப் பொருள் கடத்தலுக்காக பிடிபட்டு சிறையில் இருந்து வெளிவந்தவன் என்பதும் தற்போது தன்னுடைய விற்பனை முகவர்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்து அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பது போல் நடித்து தனது போதை வியாபாரத்தை மிகக் தந்திரமாக நடாத்தி வருகின்றவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

