புதினங்களின் சங்கமம்

எனது மனைவியுடன் பிக்கு காமலீலை~பொலிசிடம் கதறிய கணவன்..!

பல்கலைக்கழக விரிவுரையாளரான பௌத்த பிக்கு ஒருவர் மீது முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

தனது மனைவியுடன் தவறான தொடர்பை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி பிக்குவின் மீது நபர் ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான ஏத்கந்துரே சுமணசார தேரருக்கு எதிராகவே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பிக்கு ஒருவர் தனது மனைவியுடன் தவறான தொடர்பை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி குறித்த பெண்ணின் கணவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

முறைப்பாட்டை வழங்கிய நபர் பௌத்த பிக்குவின் தலைமையில் செயல்படும் அறங்காவலர் சபையின் உறுப்பினர் ஆவார்.

குறித்த சம்பவம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி சாட்சியத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து மற்றும் பௌத்த பிக்குவிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாவை இழப்பீடு கோரி வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, பௌத்த பிக்கு மேற்கொண்டு வரும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காணொளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.