யாழில் மணல் கடத்தல்காரர்களின் வாகனம் புரண்டு கடத்தல்காரன் நசுங்கிப் பலி!!
மணல் கடத்தி வந்த வாகனம் புரண்டதில் அதில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை புலோலி- கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் துன்னாலை குடவத்தையைச் சேர்ந்த ஜெ.ஜெயந்தன் (வயது- 27) என்ற இளைஞனே பலியாகியவராவார்.
மணல் கடத்தி வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.