சற்று முன் யாழ் பொன்னாலையில் பயங்கரம்!! துரத்தித் துரத்தி வாள் வெட்டு!! இருவர் படுகாயம்!! (Photos)
இனந்தெரியாத நபரின் கத்திவெட்டில்
இருவர் படுகாயமடைந்தனர்!
பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றிரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் {வயது-57}, பகிரதன் {வயது -41} ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 7.54 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதுவரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை.



